கிறிஸ்துவில் பிரியமான சகோதரர் சகோதரிகளே,
லூர்து அன்னை ஆலயத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். நமது ஆலயம் இப்போது மறுசீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. நற்கருணை கொண்டாட்டங்கள் (திருப்பலிகள்) ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள லூர்து கூடாரத்தில் நடைபெறும். சீரமைப்புப் பணிகள் முடிவடைய ஒரு வருடத்திற்கு மேல் ஆகும். இப்பணிகள் வெற்றிகரமாக முடிவடைய நாம் செபிப்போம். இப்பணிகள் காரணமாக ஆலய வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. குயின்ஸ் தெரு மற்றும் அரபு தெருவிலுள்ள பொது வாகன நிறுத்தங்களைப் பயன்படுத்தவும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும். தயவு செய்து ஒத்துழைத்து, ஆலய ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் வழிமுறைகளைப் பின்பற்றவும். அனைத்து வழிபாட்டாளர்களுக்கும் நமது ஆலயத்தைப் பாதுகாப்பான இடமாக வைத்துக் கொள்வோம். உங்கள் புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி.
இறை ஆசீர்! அருட்தந்தை மைக்கேல் சீத்தாராம் பங்குத் தந்தை |